இந்தியா

திரிணமூல் பொதுச் செயலருக்கு அமலாக்கத்துறை சம்மன்

நிலக்கரி ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத்துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. 

DIN

நிலக்கரி ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நிலக்கரி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது. தொடர்ந்து, அமலாக்கத்துறையும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜிக்கு நெருங்கியவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி அபிஷேக் பானர்ஜி நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புல்லட் பேபி.. கீர்த்தி ஷெட்டி!

பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!

எஸ்டிஆர் - 49 புரோமோ எப்போது?

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம்!

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

SCROLL FOR NEXT