சத்தீஸ்கரில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்து விழுந்தது: 7 பேர் பலி!  
இந்தியா

சத்தீஸ்கரில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்து விழுந்தது: 7 பேர் பலி!

சத்தீஸ்கரின், பஸ்தார் மாவட்டத்தில் மால்கான் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 

PTI

சத்தீஸ்கரின், பஸ்தார் மாவட்டத்தில் மால்கான் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் மாவட்டத்தின் தலைமையகமான ஜன்தல்பூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள நகர்நார் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மால்கான் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. 

சுரங்கத்தில் சுண்ணாம்புக்கல்லை வெட்டி எடுக்கும்போது, அதன் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது  உயிரிழந்தனர். முதற்கட்ட தகவலின்படி, 7 பேர் மட்டுமே சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் பணியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

ஞாயிறு பட்ஜெட்.. முந்தைய நாளில்!

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது.. மறக்காமல் இதைச் செய்ய வேண்டும்!

காங்கோவில் சுரங்கம் சரிந்து விபத்து: 200 பேர் பலி!

டி20 உலகக் கோப்பையிலிருந்து கம்மின்ஸ் விலகல்..! வேகப் பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT