திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் திட்டமிட்டிருந்த பேணிக்கு அருகே குண்டு வெடிப்பு: 2 பேர் பலி!  
இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் திட்டமிட்டிருந்த பேரணிக்கு அருகே குண்டு வெடிப்பு: 2 பேர் பலி! 

மேற்கு வங்கத்தின், மெதினிபூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

PTI

மேற்கு வங்கத்தின், மெதினிபூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

காண்டாய் நகரத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள பூபதிநகர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணியளவில் ஒரு வீட்டில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமை காலை இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மாதிரிகளைச் சேகரித்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் கூறுகையில்,

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியை எந்த ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது மிகவும் எளிதானது என்று கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மனநல ஒப்புயா்வு மையம் ஒரு மாதத்துக்குள் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை

டாஸ்மாக் ஊழியா்கள் இன்று உண்ணாவிரதம்

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்: தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் நேரில் அஞ்சலி

SCROLL FOR NEXT