மேற்கு வங்கத்தின், மெதினிபூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
காண்டாய் நகரத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள பூபதிநகர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணியளவில் ஒரு வீட்டில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமை காலை இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மாதிரிகளைச் சேகரித்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் கூறுகையில்,
மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியை எந்த ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது மிகவும் எளிதானது என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.