தில்லி மாநகராட்சி தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் போலீசார்! 
இந்தியா

தில்லி மாநகராட்சி தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் போலீசார்!

டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சி தேர்தலில் பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

DIN

டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சி தேர்தலில் பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 

நாளை நடைபெற உள்ள உள்ளாட்சித்  தேர்தலை முன்னிட்டு எந்தவித இடையூறும் இன்றி நடைபெற தலைநகரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் என மொத்தம் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

தேர்தல் பணிக்காக அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவில் இருந்து மொத்தம் 20 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அசம்பாவிதம் நடைபெறும் பகுதிகளில் அதிகளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளது. 

நகர் முழுவதும்13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அசம்பாவிதம் நடைபெறும் நெருக்கடியான பிரிவின் கீழ் வருகிறது. 

தேர்தல் பணிகள் அமைதியாக நடக்கும்வகையில் மொத்தம் 108 மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

மேலும், போலீசார் ட்ரோன்களின் உதவியுடன் இனவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்கும். மேலும் சாவடிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு பொதுமக்கள் 1090 என்ற எண்ணில் புகாரளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.45 கோடி பேர் ஓட்டுப்போடும் தகுதியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெடிலம் ஆற்றில் ரூ.37 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி: அமைச்சா் சி.வெ.கணேசன் தொடங்கிவைத்தாா்

வங்கிக் கணக்கு குறைந்தபட்ச இருப்பு அபராதம்: தி.வேல்முருகன் கண்டனம்

பண்ணை சாா்ந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

குண்டும், குழியுமான சாலை: மக்கள் அவதி

பெற்றோா் திருமணம் செய்து வைக்காத விரக்தி: இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT