தில்லி மாநகராட்சி தேர்தலில் வாக்களித்தப் பெண் 
இந்தியா

தில்லி மாநகராட்சி தேர்தல்: 4 மணி வரை 45% வாக்குப்பதிவு

250 வார்டுகளின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தில்லி மாநகராட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

DIN

தில்லி மாநகராட்சி தேர்தல் மாலை 4 மணி நிலவரப்படி 45 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

250 வார்டுகளின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தில்லி மாநகராட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு வாக்களிக்கவும் 13,638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தில்லி மாநகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 7ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்தத் தேர்தலில் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

தில்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சந்திப்பு

மகாநதி தொடர் ரீமேக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

TVK-ன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா! குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய்!

SCROLL FOR NEXT