இந்தியா

ரயில்வே துறையில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்: மத்திய ரயில்வே அமைச்சர்

ரயில்வே துறையில் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

DIN

ரயில்வே துறையில் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனை தெரிவித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: குரூப் ஏ பிரிவில் 2,201 காலிப் பணியிடங்களும், குரூப் பி பிரிவில் 858 காலிப் பணியிடங்களும், குரூப் சி பிரிவில் 3,12,944 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமலும் உள்ளது. குரூப் சி பிரிவில் வடக்கு ரயில்வேயில் 38, 754 பணியிடங்களும், மேற்கு ரயில்வேயில் 30,476 பணியிடங்களும் நிரப்பப்படாமல் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அதேபோல கிழக்கு ரயில்வேயில் 30,141 பணியிடங்களும், மத்திய ரயில்வேயில் 28,653 பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT