இந்தியா

''ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி''..! ஸ்விக்கி ஆர்டரில் முதலிடம் வகிக்கும் உணவு

ஸ்விக்கி நிறுவனத்தில் கடந்த ஆண்டைப் போல, நடப்பாண்டிலும் வாடிக்கையாளர்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. 

DIN

ஸ்விக்கி நிறுவனத்தில் கடந்த ஆண்டைப் போல, நடப்பாண்டிலும் வாடிக்கையாளர்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. 

ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் பிரியாணி கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் உணவுப் பிரியர்களாக உள்ளனர். மாநிலங்களுக்கேற்ப உணவு வகைகளும் மாறினாலும், அனைத்துத் தரப்பு மக்களாலும் விரும்பக் கூடிய உணவாக பிரியாணி உள்ளது எனலாம். 

அந்தவகையில் பிரியாணியில், வகைகளும், அதற்கேற்ப சுவைகளும் பல வகைகளில் உள்ளன. இதுவே பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை பிரியாணி பிரியர்களாக இருக்க வைக்கிறது எனலாம். 

இணையவழியில் உணவு விநியோகம் செய்து வரும் ஸ்விக்கி நிறுவனம் ஆண்டுதோறும் மக்களால் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளைப் பட்டியலிட்டு வருகிறது.

அந்தப் பட்டியலில் இந்த ஆண்டும் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, சைவமோ, அசைவமோ பிரியாணி ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் மசாலா தோசை அதிக வாடிக்கையாளர்களால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நாண், வெஜ் பிரியாணி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

அதேபோன்று சர்வதேச உணவுகளும் அதிக அளவில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதாவது, சூஷி, மெக்ஸிகன் பெளல்ஸ், பாஸ்தா ஆகியவை அதிக அளவு ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. 

நொறுக்குத் தீனி பிரிவில் சமோசா முதலிடமும், பாப்கார்ன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக பாவ் பாஜி, பிரெஞ்ச் ஃபிரை, கார்லிக் பிரெட்ஸ்டிக்ஸ் ஆகியவை அதிக அளவு ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT