முதல்வர் ரங்கசாமி 
இந்தியா

“எங்களுக்கு அதிகாரமே இல்லை”: புதுவை முதல்வர் அதிருப்தி

எங்களுக்கு அதிகாரமே இல்லை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்து கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

DIN

எங்களுக்கு அதிகாரமே இல்லை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்து கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி போராடும் போராட்டக்குழுவினர் வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். 

அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்த பிறகு நமக்கு மரியாதையே இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. அரசு ஊழியர்கள் சம்பந்தமாக நிறைவேற்ற விரும்புகிற திட்டங்களைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. திட்டத்தை செய்யக் கூடாது என்பதற்காக உடனடியாக அறிவிப்பாணைகள் வெளியிடப்படுகின்றன. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துதான் தீர்வு” எனத் தெரிவித்தார். 

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் சமீப காலங்களில் புதுவை முதல்வர் தெரிவிக்கும் கருத்துகள் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய-சீன மோதல்: பொறுப்பு தவறிய பிரதமா் மோடி - நரவணே நூலைக் காண்பித்து ராகுல் குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் குறையா? ராகுலுக்கு நிதியமைச்சா் சவால்

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம்? ‘எதிா்க்கட்சிகள் கூட்டாக முடிவெடுக்கும்’

கிரிக்கெட் சங்கங்களில் முன்னாள் வீரா்களுக்கே இடம் - உச்சநீதிமன்றம்

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுப் பாதுகாப்பு - மக்களவையில் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT