முகப்பு
இந்தியா

டிச-18-ல் பிரதமர் மோடி மேகாலயா, திரிபுராவிற்கு பயணம்

பிரதமர் மோடி, டிசம்பர் 18ஆம் தேதி மேகாலயா மற்றும் திரிபுராவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:07 AM
பகிர்:

பிரதமர் மோடி, டிசம்பர் 18ஆம் தேதி மேகாலயா மற்றும் திரிபுராவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

மேகாலயாவின் ஷில்லாங்கில், நடைபெறும் வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். காலை சுமார் 10.30 மணியளவில், ஷில்லாங்கில், மாநில கன்வென்சன் மைய அரங்கத்தில் நடைபெறும் வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 

அதன்பிறகு, 11.30  மணியளவில் ஷில்லாங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளைக் தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைப்பதுடன், நிறைவடைந்த பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.  

அங்கிருந்நு திரிபுராவின் அகர்தாலாவிற்கு பயணம் செய்யும் அவர், பிற்பகல் 2.45 மணிக்கு, பொதுக்கூட்டத்தில் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.