உத்தர்காசியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம், உத்தர்காசியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க- மெய்ப்பட்டது மெஸ்ஸியின் கனவு
உத்தர்காசியில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 24 கிலோமீட்டர் தொலைவிலும் பூமிக்கடியில் 5 கிமீ ஆழத்திலும இந்த நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.