முகப்பு
இந்தியா

ஹிமாசல பிரதேச முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி 

ஹிமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தா் சிங் சுக்குக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:51 PM
பகிர்:

ஹிமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தா் சிங் சுக்குக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே தலைநகர் தில்லியில் பிரதமர் மோடியை ஹிமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தா் சிங் சுக்கு இன்று சந்திக்கவிருந்தார்.

தற்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹிமாசலில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதையடுத்து அந்த மாநிலத்தின் 15ஆவது முதல்வராக சுக்விந்தா் சிங் சுக்கு பதவியேற்றார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →