இந்தியா

தன்பாலின ஈர்ப்புத் திருமணங்கள் அழிவுக்கு வழிவகுக்கும்: பாஜக

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் தன்பாலினத்தோரின் திருமணத்தை இரண்டு நீதிபதிகள் மட்டும் தீர்மானிக்கக்கூடாது

DIN

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் தன்பாலினத்தோரின் திருமணத்தை இரண்டு நீதிபதிகள் மட்டும் தீர்மானிக்கக்கூடாது என்றும் பாஜக எம்.பி. சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். 

பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பாஜக எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தன்பாலின ஈர்ப்பு திருமணத்திற்கு அனுமதி தர வேண்டும் என தன் பாலின ஈர்ப்பு ஜோடிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். தன்பாலின ஈர்ப்பு உறவு மற்றும் திருமணங்கள் குறித்து சர்ச்சையான மாறுபட்ட கருத்துக்கள் சமூகத்தில் நிலவி வருகின்றன. 

இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி. சுஷில் மோடி, நாட்டின் தனிப்பட்ட வாழ்க்கை முறையின் அழிவுக்கு வழிவகுக்கும். சமூகப் பிரச்னையில் இரு நீதிபதிகள் மட்டுமே முடிவு எடுக்க முடியாது. நாடாளுமன்றமும் சமூகமும் முக்கிய விவாதங்களை எழுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை!

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

“பாரன் டிரம்ப் ரொனால்டோவின் மிகப் பெரிய ரசிகன்”... வெள்ளை மாளிகையில் பிரமாண்ட விருந்தளித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT