சீனத்தை அச்சுறுத்தும் ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் பரவல் 
இந்தியா

சீனத்தை அச்சுறுத்தும் ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் பரவல்

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு புதிதாக அதிகரித்துவரக் காரணமான ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

புது தில்லி: சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு புதிதாக அதிகரித்துவரக் காரணமான ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா உள்பட பல நாடுகளில் தற்போது அதிகரித்து வரும் ஒமைக்ரான் வகை பிஎஃப்.7 வகையிலான திரிபு வைரஸ் இந்தியாவிலும் பரவியிருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் கரோனா வைரஸ் கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தி நடத்தியிருந்தது.

இந்த நிலையில், கரோனா அதிகம் பரவி வரும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யும் நடைமுறை மீண்டும் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், பிஎஃப.7 வகையான ஒமைக்ரான் திரிபு குஜராத்தில் 2 பேருக்கும் ஒரிசாவில் ஒருவருக்கும் பாதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னமராவதியில் நல்லகண்ணுக்கு புகழஞ்சலி

27.2.1976: த.நா. நில சீர்திருத்த நடவடிக்கை - 85000 ஏக்கர் 40500 குடும்பங்களுக்கு வினியோகம்

நகை மதிப்பீட்டாளா் கொலையில் மனைவி, மகன் உள்பட 5 போ் கைது

கச்சத்தீவு தேவாலயத் திருவிழா இன்று தொடக்கம்!

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு

SCROLL FOR NEXT