முகப்பு
இந்தியா

தில்லி சந்தையில் பயங்கர தீ விபத்து!

மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள டிடிஏ லால் சந்தையில் இன்று காலை ஒரு கடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

Updated On : 24 டிசம்பர், 2022 at 2:37 PM
பகிர்:


மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள டிடிஏ லால் சந்தையில் இன்று காலை ஒரு கடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

விகாஸ்புரி பகுதியில் அதிகாலை 5.50 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு 18 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது, காலை 10 மணியளவில் அணைக்கப்பட்டதாகத் தீயணைப்பு அதிகாரி தெரிவித்தனர்.

Advertisement

இந்த தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.