பிரதமர் மோடியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் சந்திப்பு
பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தில்லியில் சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தில்லியில் சந்தித்து பேசினார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னெளவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.