பஞ்சாபில் சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ஆளில்லா விமானம் 
இந்தியா

பஞ்சாபில் சுட்டுவீழ்த்தப்பட்டது பாகிஸ்தான் ஆளில்லா விமானம்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பறந்த ஆளில்லா விமானம் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவ

DIN

புது தில்லி: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பறந்த ஆளில்லா விமானம் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அமிர்தசரஸ் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் ஆளில்லா விமானம் வருவதும் அதனை எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7:40 மணியளவில் பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள ராஜதல் கிராமத்தின் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பறந்த ஆளில்லா வான்வழி வாகனம் பறந்தது. உடனடியாக எல்லை பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டது. 

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனம் குவாட்காப்டர் எல்லை வேலிக்கு அருகில் உள்ள வயலில் இருந்து மீட்கப்பட்டது, மேலும், அது அந்த பகுதியில் ஏதேனும் வெடிபொருள்கள் கீழே விழுந்ததா என தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று எல்லைப் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறினார். 

கடந்த வாரம் பஞ்சாபில் இதுபோன்ற குறைந்தது மூன்று பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் எல்லைப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT