திருச்சி விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து இருந்து முறைகேடாக கடத்திக் கொண்டு வரப்பட்ட பசை வடிவிலான தங்கத்தை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். 
இந்தியா

திருச்சி விமான நிலையத்தில்: ரூ.46 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

ஷார்ஜாவிலிருந்து இருந்து முறைகேடாக கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

திருச்சி: ஷார்ஜாவிலிருந்து இருந்து முறைகேடாக கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் ஷார்ஜாவிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவர் தனது உடலுக்குள் மறைத்து 845 கிராம் தங்கத்தைக் (பசை வடிவில்) கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.46.37 லட்சமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT