முகப்பு
இந்தியா

திருச்சி விமான நிலையத்தில்: ரூ.46 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

ஷார்ஜாவிலிருந்து இருந்து முறைகேடாக கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 26 டிசம்பர், 2022 at 12:27 PM
திருச்சி விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து இருந்து முறைகேடாக கடத்திக் கொண்டு வரப்பட்ட பசை வடிவிலான தங்கத்தை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பகிர்:

திருச்சி: ஷார்ஜாவிலிருந்து இருந்து முறைகேடாக கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் ஷார்ஜாவிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவர் தனது உடலுக்குள் மறைத்து 845 கிராம் தங்கத்தைக் (பசை வடிவில்) கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.46.37 லட்சமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.