இந்தியா

தொழில் நிறுவனங்களுக்கான அவசர கால கடன் 2023-ஆம் ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பு

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான(எம்எஸ்எம்இ) அவசரகால கடனுதவித் திட்டம் (இசிஎல்ஜிஎஸ்) 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

DIN

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான(எம்எஸ்எம்இ) அவசரகால கடனுதவித் திட்டம் (இசிஎல்ஜிஎஸ்) 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இதனால், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கு அவசர கால கடனுதவி வழங்கும் திட்டம் 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அந்த திட்டத்துக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும். அதன் மூலம் கூடுதலாக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். அந்தத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் கூடுதலாக 130 லட்சம் குறு-சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்படுவதன் மூலம், பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிா்கொள்ள இயலும்.

5 நதிகளை இணைப்பதற்கான விரிவான வரைவுத் திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது. கென்-பெத்வா நதிகள் இணைப்புத் திட்டம் ரூ.44,605 கோடியில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT