பட்ஜெட் உரை: 4 ஆண்டுகளாக நிர்மலா சீதாராமன் எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 31 நிமிடங்களுக்கு உரையாற்றினார்.
2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 31 நிமிடங்களுக்கு உரையாற்றினார்.
கடந்த 4 ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கை மீது உரையாற்ற அவர் எடுத்துக்கொண்ட குறைவான நேரம் இது.
2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தார். உடன் மத்திய நிதித் துறை இணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
இதையடுத்து, நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை காலை 10.20 மணியளவில் கூடியது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க | பொது பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்
நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, மக்களவையில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி அடுத்த 25 ஆண்டுகளில் விரிவடைவதற்கு அடித்தளமாக இந்த நிதிநிலை இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
11 மணியளவில் தாக்கல் செய்யத் தொடங்கிய நிர்மலா சீதாராமன் 1 மணி 31 நிமிடங்களுக்கு உரையாற்றினார். கடந்த 4 ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கை மீது உரையாற்ற அவர் எடுத்துக்கொண்ட குறைவான நேரம் இது.
கடந்தாண்டு நிதிநிலை அறிக்கை மீது உரையாற்ற அவர் 1 மணி நேரம் 48 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். 2020-இல் இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். இதுவே அவர் எடுத்துக்கொண்ட அதிகபட்ச நேரம். இதற்கு முன்பாக 2019-இல் 2 மணி நேரம் 17 நிமிடங்களுக்கு நிதிநிலை அறிக்கை மீது அவர் உரையாற்றினார்.