இந்தியா

25 ஆண்டுகளை இலக்காகக் கொண்ட பட்ஜெட்: நிதியமைச்சர்

DIN

அடுத்த 25 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான அவர், தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 

அப்போது உரையாற்றிய அவர், அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கரோனா பரவல் குறைந்துள்ளது என்றார். 

தொடர்ந்து துறை ரீதியாக அவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT