முகப்பு
இந்தியா

பாஜகவை வீழ்த்த பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா

2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:


2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவராகப் போட்டியின்றித் தேர்வான பிறகு அவர் பேசியதாவது:

"2024-இல் பாஜகவை வீழ்த்த பிராந்தியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த முடிந்த நம்மால் தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த முடியும். மேகாலயா மற்றும் சண்டிகரில் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் உதவியுள்ளது.

பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒரு தளத்தின்கீழ் வர வேண்டும். யாரேனும் 'ஈகோ' (Ego) காரணத்திற்காக வர மறுத்தால், பிறகு நம்மைக் குற்றம்சாட்டக் கூடாது. தேவைப்பட்டால் பாஜகவுக்கு எதிராக நாம் தனித்துப் போட்டியிடுவோம்."

முழு கட்டுரையைப் படிக்க →