கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப்: இந்திய எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

DIN

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூர் பகுதியைச் சேர்ந்த கேஎஸ் வாலா இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் நேற்று(பிப்.2) பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்றதாக எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை தரப்பில்,’ நேற்று மாலை ஃபெராஸ்பூர் பகுதியைச் சேர்ந்த கேஎஸ் வாலா இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சில அசைவுகள் தெரிந்தது. இதனால் கண்காணிப்பில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஒருவர் ஊடுருவியதை உறுதி செய்தனர். பின், அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், ஊடுருவிய நபர் இந்தியப் பகுதிக்குள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்ததால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காக சுட்டுக்கொன்றனர்’ எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் வேறு சிலரின் நடமாட்டம் உள்ளதா எனவும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT