முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 1.72 லட்சம் பேருக்கு கரோனா; 1,008 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.72 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 1,008 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.72 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 1,008 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை வியாழக்கிழமை இன்று (பிப்.3) வெளியிட்டது.

அதில், புதிதாக 1,72,433 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,18,03,318-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,008 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,98,983-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 2,59,107 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,97,70,414-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 10.99 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 167.87 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →