அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

‘எங்களுக்கு வாக்களியுங்கள்’: எதிர்க்கட்சித் தொண்டர்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

உங்கள் கட்சியிலிருந்து விலகத் தேவையில்லை, ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DIN

உங்கள் கட்சியிலிருந்து விலகத் தேவையில்லை, ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. இதில், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இந்நிலையில், இன்று கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த கேஜரிவால் பேசுகையில்,

பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சியை சேர்ந்தவர்கள் உங்கள் கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணையத் தேவையில்லை. ஆனால், உங்கள் குழந்தைகள் மற்றும் கோவாவில் நலனுக்காக வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுகிறேன்.

தயவு செய்து உங்கள் கட்சியை தவிர்த்துவிட்டு எங்களுக்கு வாக்களியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு தினம்: பிப்.1-ல் மதுக் கடைகள் அடைப்பு!

மருத்துவமனைக் கண்காணிப்பாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4.27 லட்சம் திருட்டு!

வைகை அணை பகுதிகளில் நாளை மின்தடை!

முதியோா் ஓய்வூதியத் திட்டம்: பிப்.4-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

SCROLL FOR NEXT