பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால்.. மிரட்டும் தனியார் பள்ளிகள் 
இந்தியா

பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால்.. மிரட்டும் உ.பி. தனியார் பள்ளிகள்

உத்தரப்பிரதேசத்தில் உடனடியாக பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால், ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தப் போவதாக அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கழகம் மிரட்டல் விடுத்துள்ளது.

IANS


லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் உடனடியாக பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால், ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தப் போவதாக அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கழகம் மிரட்டல் விடுத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு உதவி பெறாத 250 தனியார் பள்ளிகளின் சங்கம் சார்பில், மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், உடனடியாக பள்ளிகளைத் திறக்க உத்தரவிடாவிட்டால், ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தப்போவதாகவும், பேரவைத் தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 6ஆம் தேதி வரை காத்திருப்போம். அதற்குள் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகாவிட்டால், அதன்பிறகு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT