பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது குறித்து...
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
யுபிஐ மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக, வெள்ளிக்கிழமை (ஏப். 24) இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில்,
Advertisement
“வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் எதிரான வகையில் வங்கியின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதால் அதன் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பொதுநலனுக்கும் அதன் வைப்பாளர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதனால், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அனைத்து வகையான வங்கி வணிகத்தையும் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த வங்கியின் சேவைகள் நிறுத்தப்படுவதால் அதன் முழுமையான வைப்புத்தொகை சார்ந்த பொறுப்புகளைத் திருப்பி வழங்குவதற்குத் தேவையான நிதியைக் கொண்டுள்ளது எனவும், வங்கியைக் கலைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு, கடந்த 2022 மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.