முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 1.49 லட்சம் பேருக்கு கரோனா; 5 லட்சத்தைத் தாண்டிய பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,49,394 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 1,072 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,49,394 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 1,072 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு வருகின்றது. இன்று வெளியிட்டுள்ள தகவலில்,

நாட்டில் புதிதாக 1,49,394 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,072 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,00,055 -ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 2,46,674 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் இதுவரை 168.47 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 9.27 சதவிகிதமாக குறைந்துள்ளது. தற்போது 14,35,569 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →