நாட்டில் புதிதாக 1.27 லட்சம் பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,27,952 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,27,952 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.27 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2,30,814 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,02,47,902 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி 10ஆம் தேதிக்கு மாற்றம்
1,059 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,01,114 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 13,31,648 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 47,53,081 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,68,98,17,199 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.