முகப்பு
இந்தியா

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் பின்னடைவு

புகழ்பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு மீண்டும் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருப்பதாகவும் சிகிச்சையளித்து வரும் மருத்துவர் சனிக்கிழமை தெரிவித்துள

Updated On : 5 பிப்ரவரி 2022, 4:50 pm IST
லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் பின்னடைவு
பகிர்:

மும்பை: புகழ்பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு மீண்டும் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருப்பதாகவும் சிகிச்சையளித்து வரும் மருத்துவர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

92 வயதாகும் லதா மங்கேஷ்கர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு லேசான அறிகுறிகளுடன் மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

"அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ளது. தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார், மீண்டும் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது" என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் பிரதித் சம்தானி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

லதா மங்கேஷ்கருக்கு லேசான அறிகுறியுடன் கரோனா தாக்கம் கண்டறியப்பட்டதால் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சோதனை அடிப்படையில் வென்டிலேட்டா் அகற்றப்பட்டதாகவும் குடும்பத்தினா் தெரிவித்திருந்தனர். மேலும், அவர் கரோனா மற்றும் நிமோனியா தொற்றிலிருந்தும் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் இன்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments