முகப்பு
இந்தியா

ஐஎஸ்சிஇ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு

ஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

Updated On : 7 பிப்ரவரி, 2022 at 3:51 PM
ஐஎஸ்சிஇ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு
பகிர்:


புது தில்லி: ஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில், ஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளும் முறையிலும்ட, மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில் கரோனா பேரிடர் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போனதால், இந்த கல்வியாண்டில் இரண்டு பருவங்களாகப் பிரித்து இரண்டு பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நவம்பர் - டிசம்பர் மாதத்தில் முதல் பருவத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதே முறையில் முதல் பருவத் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ நிர்வாகம், இதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.