ஆந்திர மாநிலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று(பிப்.9) காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதற்கு முன், நேற்று ரூ.2 கோடி மதிப்பிலான குட்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களையும் விசாகப்பட்டினத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.