முகப்பு
இந்தியா

ஒடிசாவில் மேலும் 1,480 பேருக்கு கரோனா: 21 பேர் பலி

ஒடிசாவில் புதிதாக 1,480 பேர் கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

ஒடிசாவில் புதிதாக 1,480 பேர் கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

மாநிலத்தில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக 12,73,003 பேர் இதுவரை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 8,818 பேர் பலியாகியுள்ளனர். 

தற்போது தொற்று பாதித்து 15,980 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரேநாளில் 3,126 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 12,48,152 பேர் நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். 

புதன்கிழமை மாநிலத்தில் 58,816 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →