இந்தியா

உ.பி. தேர்தல்: காலை 9.30 மணி நிலவரப்படி 7.95% வாக்குகள் பதிவு

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (பிப்.10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9:30 மணி நிலவரப்படி 7.95 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

DIN

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (பிப்.10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
காலை 9:30 மணி நிலவரப்படி 7.95 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட  உத்தர பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் இன்று வியாழக்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 

முதல் கட்டத் தோ்தல், மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் 10,766 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணைய அறிக்கையின் படி, மதுரா தொகுதியில் 8.23% வாக்குகளும், ஆக்ராவில் 7.64 % வாக்குகளும், பாக்பத் தொகுதியில் 8.93% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மேலும் அலிகா் தொகுதியில் 8.39% வாக்குகளும், கௌதம்புத்தா நகா் தொகுதியில் 8.07% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

சட்டசபை தேர்தலின் முதல் கட்ட தேர்தலில் சுமார் 2.27 கோடி வாக்காளர்கள் 623 வேட்பாளர்களின் தலைவிதியை முடிவு செய்ய உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT