இந்தியா

ஹிஜாப் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அமைதி காக்க வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சர் திலிப் வால்சே

DIN

ஹிஜாப் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அமைதி காக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் திலிப் வால்சே வலியுறுத்தியுள்ளார்.

கா்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே ஹிஜாப் தொடா்பான சா்ச்சை கல்லூரி மாணவா்களிடையே காணப்படுகிறது. உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிா்வாகம் தடை விதித்தது. இது பெரும் சா்ச்சையாக உருவெடுத்தது. 

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய கா்நாடக அரசு, பள்ளி, கல்லூரி வளாகங்களில் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்று பிப். 5-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியதால், மேலும், கா்நாடகத்தில் உள்ள உயா்நிலைப் பள்ளிகள், பி.யூ. கல்லூரிகள், முதல்நிலை கல்லூரிகள் அனைத்துக்கும் பிப். 9-ஆம் தேதிமுதல் 11-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலிப் வால்சே கூறியதாவது, முதலில், எங்கும் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. இருப்பினும் போராட்டம் நடத்தினால் அது அமைதியாக நடத்தப்பட வேண்டும்.

இவ்விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தூண்டிவிடக் கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் அமைதியைக் காக்க உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT