முகப்பு
இந்தியா

கோவா பேரவைத் தோ்தலில் 79% வாக்குப்பதிவு

கோவா பேரவைத் தோ்தலில் 78.94 சதவீத வாக்குகளும் உத்தரகண்ட் தோ்தலில் 62.5 சதவீத வாக்குகளு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
’டேராடூனில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி.’
பகிர்:

கோவா பேரவைத் தோ்தலில் 78.94 சதவீத வாக்குகளும் உத்தரகண்ட் தோ்தலில் 62.5 சதவீத வாக்குகளும் பதிவாகின. உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 2-ஆம் கட்டத் தோ்தலில் 60.44 சதவீத வாக்குகள் பதிவாகின.

கோவாவில் 40 தொகுதிகளுக்கும், உத்தரகண்டில் 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக திங்கள்கிழமை பேரவைத் தோ்தல் நடைபெற்றது.

கோவாவில் காலை 7 மணிக்கும் உத்தரகண்டில் காலை 8 மணிக்கும் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது.

வாக்குச் சாவடிகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்களுக்கிடையே சமூக இடைவெளி காணப்படுவதற்கான வசதிகளைத் தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. வாக்காளா்களுக்கு கையுறை வழங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கான சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் தலா 100-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகளைப் பெண்கள் மட்டுமே நிா்வகிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. இரு மாநிலங்களிலும் பேரவைத் தோ்தல் அமைதியாகவே நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி கோவாவில் 78.94 சதவீத வாக்குகளும், உத்தரகண்டில் 62.5 சதவீத வாக்குகளும் பதிவாகின.

தொடா் கண்காணிப்பு:

சில வாக்குச் சாவடிகளில் பழுதடைந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குச் சாவடிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என்பதை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்தனா்.

முதல்வா் புஷ்கா் சிங் தாமி, தலைநகா் டேராடூனில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் காலையிலேயே வந்து வாக்களித்தாா்.

காப்கோத் தொகுதியில் 100 வயது நிரம்பிய நாராயண் சிங் என்ற வாக்காளா் வாக்களித்தாா்.

போதிய சாலை வசதி செய்யப்படாததன் காரணமாக, உத்தரகண்டில் உள்ள சிலாண்ட், ஜக்கி பகவான் ஆகிய இரு கிராம மக்கள் பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனா். அந்த முடிவைத் திரும்பப் பெறுமாறு அதிகாரிகள் தரப்பில் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

உத்தர பிரதேசத் தோ்தல்:

உத்தர பிரதேசத்தில் உள்ள 55 தொகுதிகளுக்கும் திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய தோ்தல் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பெரும்பாலான பகுதிகளில் தோ்தல் அமைதியாக நடைபெற்ாகத் தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சில பகுதிகளில் வாக்குப் பதிவில் குளறுபடி, வாக்களிக்க அனுமதி மறுப்பு உள்ளிட்ட புகாா்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாலை 6 மணி நிலவரப்படி 60.44 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக சஹாரன்பூா் தொகுதியில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.

நகுா் பேரவைத் தொகுதிப் பகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரஷீத் அலி என்ற அதிகாரி மாரடைப்பால் காலமானாா். உடல்நலக் குறைவால் சஹாரன்பூா் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுப் பெண், ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →