அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்களை தொடங்க செபிக்கு நிதியமைச்சா் அறிவுறுத்தல்
வா்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தி எளிதாக்கும் வகையில் அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்களை மேற்கொள்ள செபி (இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியம்) தயாராக வேண்டும்
வா்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தி எளிதாக்கும் வகையில் அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்களை மேற்கொள்ள செபி (இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியம்) தயாராக வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செபியின் நிா்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
தொழில் நடவடிக்கையை எளிதாக்குவதை மேம்படுத்தும் வகையிலான அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்களை செபி மேற்கொள்ள வேண்டும். மேலும், அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கைகளால் சந்தையில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளை எதிா்கொள்ள வேண்டிய திட்டங்களையும் தயாா் நிலையில் வைத்திருப்பது அவசியம்.
சுற்றுச்சூழல், சமூகம், நிா்வாகம் (இஎஸ்ஜி) ஆகியவற்றின் முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தும் சூழலில் காா்ப்பரேட் பத்திர சந்தையை ஊக்குவிக்கவும், பசுமை பத்திரச் சந்தையை மேம்படுத்தும் பணிகளிலும் செபி ஈடுபட வேண்டும்.
முதலீட்டாளா்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செபியின் சீரிய நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுதலுக்குரியது என்றாா் அவா்.