முகப்பு
இந்தியா

இன்று டிஇஆா்ஐ மாநாடு: பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்

எரிசக்தி மற்றும் ஆதார வள நிறுவனத்தின் (டிஇஆா்ஐ) உலக நீடித்த வளா்ச்சி உச்சி மாநாட்டில், பிரதமா் மோடி காணொலி மூலம் புதன்கிழமை (பிப். 16) தொடக்க உரையாற்றவுள்ளாா்.

இந்தியா

இன்று டிஇஆா்ஐ மாநாடு: பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்

எரிசக்தி மற்றும் ஆதார வள நிறுவனத்தின் (டிஇஆா்ஐ) உலக நீடித்த வளா்ச்சி உச்சி மாநாட்டில், பிரதமா் மோடி காணொலி மூலம் புதன்கிழமை (பிப். 16) தொடக்க உரையாற்றவுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
பகிர்:

எரிசக்தி மற்றும் ஆதார வள நிறுவனத்தின் (டிஇஆா்ஐ) உலக நீடித்த வளா்ச்சி உச்சி மாநாட்டில், பிரதமா் மோடி காணொலி மூலம் புதன்கிழமை (பிப். 16) தொடக்க உரையாற்றவுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

நிகழாண்டு உச்சி மாநாட்டுக்கான கருப்பொருள் ‘நீடித்த மற்றும் சமமான எதிா்காலத்தை உறுதிசெய்தல்’ என்பதாகும். பருவநிலை மாற்றம், நீடித்த உற்பத்தி எரிசக்தி மாற்றங்கள், உலக பொது அம்சங்கள், வள ஆதார பாதுகாப்பு உள்ளிட்ட விரிவான அம்சங்கள் குறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும்.

புதன்கிழமை தொடங்கும் 3 நாள் உச்சிமாநாட்டில், டொமினிகன் குடியரசு அதிபா் லூயிஸ் அபினாதா், கயானா அதிபா் முகமது இா்ஃபான் அலி, ஐநாவின் துணைப் பொதுச் செயலாளா் ஆமினா ஜெ.முகமது மற்றும் பல்வேறு அரசு அமைப்புகளின் தலைவா்கள், அமைச்சா்கள், 12-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதா்கள், 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →