முகப்பு
இந்தியா

கேரளத்தில் கம்யூனிஸ்ட் தொண்டர் கொலை: ஆர்எஸ்எஸ் மீது குற்றச்சாட்டு

கேரளத்தில் சிபிஎம் தொண்டர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

கேரளத்தில் சிபிஎம் தொண்டர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம், தலச்சேரியில் உள்ள நியூ மாஹே என்ற இடத்தில் சிபிஐ(எம்) தொண்டர் ஒருவர் நேற்று நள்ளிரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில் உயிரிழந்தவர் பன்னாலைச் சேர்ந்த மீனவர் ஹரிதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே இந்தக் கொலைக்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →