நவாப் மாலிக்கின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படாது: சஞ்சய் ரௌத்
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படாது என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படாது என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
தாவூத் இப்ராஹிம் பணமோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவரை மார்ச் 3-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க | வெளிநாட்டு முதலீடுகளுக்கான கவர்ச்சி மையம் இந்தியா: மத்திய அமைச்சர்
செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், "நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ராஜிநாமா செய்ய வேண்டும்" என்றார்.
இந்த நிலையில், நவாப் மாலிக் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படாது என சஞ்சய் ரௌத் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணியுடன் நேருக்கு நேர் மோத முடியாததால், அப்சல் கானைப் போல பின்னாடியிருந்து தாக்குகின்றனர். நவாப் மாலிக்கின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படாது. நாங்கள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு வெற்றி பெறுவோம். கன்சாவும், ராவணனும் கொல்லப்பட்டனர். இது ஹிந்துத்வா. போர் தொடங்கியே உள்ளது. ஜெய் மகாராஷ்டிரா."