இந்தியா

உ.பி.யில் 4 கட்ட தேர்தலில் 1,137 வன்முறை வழக்குகள் பதிவு

உத்தரப் பிரதேச காவல்துறை முதல் நான்கு கட்டத் தேர்தல்களில் நடத்தை விதிகளை மீறியதாக 1,137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

DIN

உத்தரப் பிரதேச காவல்துறை முதல் நான்கு கட்டத் தேர்தல்களில் நடத்தை விதிகளை மீறியதாக 1,137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

டிஜிபி தலைமையகத்தில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 

தேர்தலின் போது இதுவரை ஒரு வன்முறை அல்லது மோதல் சம்பவம் கூட பதிவாகவில்லை. காவல்துறையின் முன்கூட்டியே ஆயத்தம் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டதே இதற்குக் காரணம். 

தேர்தல் விதிகளை மீறிய மாவட்டங்களில் 51 வழக்குகளுடன் மீரட்.முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து ஜான்சியில் 45 வழக்குகள் பதிவாகியுள்ளது. 

மொத்தம் பதிவாகியுள்ள 1,137 வழக்குகளும் ஆதாரங்களின்படி முறையாக விசாரிக்கப்படும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ADG) பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

தேர்தல் தொடங்குவதற்கு முன்பு அனைத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்களுக்கும் பல சுற்று விளக்கங்கள் வழங்கப்பட்டன. 

ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மத்திய ஆய்தமேற்திய துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டனர். 

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தினோம் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT