இந்தியா

உக்ரைனில் சிக்கிய மகாராஷ்டிர மக்களை மீட்க நடவடிக்கை: அஜித் பவார்

DIN

உக்ரைனில் சிக்கியுள்ள மகாராஷ்டிர மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுமார் 1200 முதல் 2000 பேர் வரை உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

மகாராஷ்டிரத்தில் சிக்கித் தவிப்பவர்களில் இதுவரை 366 பேரை மட்டுமே தொடர்புகொள்ள முடிந்தது. மற்றவர்களைத் தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். விரைவில் அவர்கள் பத்திரமாக நாடு திரும்புவார்கள் என்றார். 

மேலும், மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று பெருமளவில் குறைந்து வருவதால் மருத்துவமனைகள் மூடப்படுவது குறித்தும் அவர் பேசினார். 

பிப்ரவரி 28 முதல் புணேயில் உள்ள இரண்டு ஜம்போ மருத்துவமனைகளையும் மூட முடிவு செய்துள்ளோம். கரோனாவின் மூன்றாவது அலையின்போது இந்த மருத்துவமனைகளை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT