உத்தரகண்டில் காங்கிரஸில் இணைந்தார் ஆம் ஆத்மி தலைவர்
தில்லியில் பிரியங்கா காந்தி முன்னிலையில் உத்தரகண்ட் மாநில ஆம் ஆத்மி தலைவர் காங்கிரஸில் இன்று இணைந்தார்.
தில்லியில் பிரியங்கா காந்தி முன்னிலையில் உத்தரகண்ட் மாநில ஆம் ஆத்மி தலைவர் காங்கிரஸில் இன்று இணைந்தார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
இந்த நிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் உத்தரகண்ட் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அனந்த் ராம் சௌகான் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸில் இணைந்தார்.
தில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முன்னிலையில் அவர் தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.