இந்தியா

எண்ணிக்கைகள் அதிகமாக இருந்தாலும், லேசான தொற்றுதான்: கேஜரிவால்

DIN


தில்லியில் கரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலானோருக்கு மருத்துவமனை உதவிகள் அவசியமில்லாத வகையில் லேசான தொற்று மட்டுமே ஏற்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

காணொலி வாயிலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கேஜரிவால் மேலும் கூறியது: 

"தில்லியில் நோய்த் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை டிசம்பர் 29-ம் தேதி 2 ஆயிரம் ஆக இருந்த நிலையில், ஜனவரி 1-ம் தேதி அது 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. டிசம்பர் 29 நிலவரப்படி 262 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். ஜனவரி 1 நிலவரப்படி 247 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்தாண்டு மார்ச் 27-ம் தேதி தில்லியில் 6,600 பேர் நோய்த் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வந்தனர். 1,150 ஆக்ஸிஜன் படுக்கைகள் பயன்பாட்டில் இருந்தன.145 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தனர். தற்போது 5 பேர் மட்டுமே வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி 6,360 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,100 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான தொற்றுதான் உள்ளது. அவர்களுள் பெரும்பாலானோருக்கு மருத்துவமனை உதவிகள் அவசியமில்லை" என்றார்.

நாட்டில் இதுவரை மொத்தம் 1,525 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தில்லியில் மட்டும் 351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT