இந்தியா

தில்லியில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு: துணை முதல்வர்

DIN


புது தில்லி: கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்துவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லியில், கரோனா பரிசோதனை செய்வோரில் தொற்று உறுதியாகும் விகிதம் கடந்த 24 மணி நேரத்தில் 6.5 சதவிகிதமாக உயர்ந்திருக்கும் நிலையில், தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.

ஆலோசனைக்கு பின், துணை முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில்,

“தில்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுத்துள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர பிற அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்.

பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டத்தைத் தவிர்க்க பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

தில்லியில் கடந்த 8 முதல் 10 நாள்களில் 11,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வகை கரோனாவும் பரவி வருகின்றது. மருத்துவமனையில் 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 124 பேருக்கு ஆக்ஸிஜன் மற்றும் 7 பேர் வெண்டிலேட்டர் உதவியுடனும் இருக்கின்றனர்”

ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, உணவகம் உள்ளிட்டவைக்கு கட்டுப்பாடுகள் என மஞ்சள் எச்சரிக்கை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT