ஒமைக்ரான் காரணமாக இந்தியாவில் முதல் பலி
ஒமைக்ரான் காரணமாக இந்தியாவில் முதல் உயிரிழப்பு
ராஜஸ்தானில் ஒமைக்ரான் காரணமாக ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான் காரணமாக ஒருவர் உயிரிழப்பு இதுவே முதல்முறை. 73 வயதான லட்சுமிநாராயணன் நாகருக்கு கரோனா இருப்பது கடந்த டிசம்பர் 15ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அதேபோல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என இணை நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, நாகருக்கு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததையடுத்து, அவரின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்காக அனுப்பப்பட்டது. டிசம்பர் 25ஆம் தேதி வெளியான மரபணு முடிவுகளில், அவருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ஆறு நாள்கள் கழித்து, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி, அவர் மரணம் அடைந்தார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். பயணம் எங்கும் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.