முகப்பு
இந்தியா

மும்பையில் 93 காவலர்களுக்கு கரோனா

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 93 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா

மும்பையில் 93 காவலர்களுக்கு கரோனா

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 93 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 93 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 9,657ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை பொறுத்தவரை நேற்று 67,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் 20,181 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்களில் 1,170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,53,809ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு நேற்று மேலும் 4 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிகை 16,388ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் கரோனவிலிருந்து 2,837 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,55,563ஆக உயந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 35,594 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →