இந்தியா

ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவுக்கு கரோனா 

ஹரியாணாவில் துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

ஹரியாணாவில் துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், இன்று லேசான காய்ச்சலால் எனக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது, அதன் அறிக்கை பாசிட்டிவ் என்று வந்துள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். 

கடந்த 48 மணி நேரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
ஹரியாணாவில் வெள்ளிக்கிழமை 3,748 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 10,775 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT