உரிமம் புதுப்பிப்பு:தெரஸா அறக்கட்டளை மீண்டும்வெளிநாட்டு நன்கொடை பெற அனுமதி
கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரஸா அறக்கட்டளையான ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ மீண்டும் வெளிநாட்டு நன்கொடை பெறும் வகையில் எஃப்சிஆா்ஏ உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் புதுப்பித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரஸா அறக்கட்டளையான ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ மீண்டும் வெளிநாட்டு நன்கொடை பெறும் வகையில் எஃப்சிஆா்ஏ உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் புதுப்பித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் எஃப்சிஆா்ஏ உரிமம் புதுப்பிக்கப்பட்டிருப்பதன் மூலம், அந்த அறக்கட்டளை இனிமேல் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறலாம்; வங்கிகளில் உள்ள பணத்தையும் செலவு செய்யலாம்’ என்றாா்.
இதுகுறித்து மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பு அதிகாரபூா்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இருப்பினும், அந்த அமைப்பின் மூத்த அலுவலா் ஒருவா், சாரிட்டியின் உரிமம் ஜன. 7-ஆம் தேதி புதுப்பிக்கப்பட்டதாகக் கூறினாா்.
Advertisement
Advertisement
அவா் மேலும் கூறுகையில், ‘எஃப்சிஆா்ஏ உரிமம் புதுப்பிக்கப்படாத நிலையிலும் நன்கொடையாளா்கள் மற்றும் நலம் விரும்பிகளின் உதவியுடன் ஏழ்மை நிலையில் இருப்பவா்களுக்கு சாரிட்டியின் உதவி தொடா்ந்தது’ என்றாா்.
கொல்கத்தாவில் அன்னை தெரஸாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. சில நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யாததால் அந்த அறக்கட்டளையின் விண்ணப்பத்தை நிராகரித்ததாக உள்துறை அமைச்சகம் கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி தெரிவித்தது.
இதற்கிடையே, சாரிட்டியின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியானதால், மத்திய அரசை திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டின.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு பதிலளித்தது. சாரிட்டி அமைப்பு தங்கள் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியிடம் கோரிக்கை விடுத்ததாக, வங்கி சாா்பில் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.