முகப்பு
இந்தியா

ரத்தாகும் அறை முன்பதிவுகள்: கலக்கத்தில் தில்லி விடுதிகள்

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலரும் தாங்கள் செய்திருந்த அறை முன்பதிவுகளை ரத்து செய்யத் தொடங்கியிருப்பதாக விடுதி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Updated On : 12 ஜனவரி, 2022 at 4:16 PM
ரத்தாகும் அறை முன்பதிவுகள்: கலக்கத்தில் தில்லி விடுதிகள்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:36 PM


புது தில்லி: கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலரும் தாங்கள் செய்திருந்த அறை முன்பதிவுகளை ரத்து செய்யத் தொடங்கியிருப்பதாக விடுதி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தில்லியில் ஐந்தாவது கரோனா அலை அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் தில்லி விடுதி உரிமையாளர்கள், மீண்டும் ஒரு சரிவைக் காணத் தொடங்கியிருக்கிறார்கள்.

கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் பலரும், இதுவரை 50 சதவீத அறை முன்பதிவுகளை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

வார இறுதி நாளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுமே, விடுதி அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி முதல் வாரம் வரை எந்த முன்பதிவுகளும் இல்லை. முன்பதிவு செய்து சுற்றுலா வருவோரை விடவும், ரத்து செய்வோரே அதிகம் என்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.