எம்.பி.யாக நிதீஷ் குமார் நாளை(ஏப். 10) பதவியேற்பு! அடுத்த முதல்வர் யார்?
பிகாரின் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி...
ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் நாளை(ஏப். 10) மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் கூறியபடியே பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை, சட்ட மேலவை, மக்களவை என பல்வேறு பதவிகளில் இருந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
Advertisement
Advertisement
மாநிலங்களவை எம்.பி.யாக நாளை (ஏப். 10) நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளார். அதன்பின்னர் ஓரிரு நாள்களில் அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று ஜேடியு மூத்த தலைவர் விஜயகுமார் சௌத்ரி கூறியுள்ளார்.
அதன்படி வருகிற ஏப். 14 ஆம் தேதி பிகாரில் புதிய முதல்வர் பதவியேற்பார் என்றும் தற்போதைய துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரிக்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சாம்ராட் சௌத்ரி, பாஜக தலைமையுடன் ஆலோசிக்க தில்லி சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலேயே 10 முறை முதல்வராகப் பதவியேற்றவர் என்ற பெருமைக்குரியவர் நிதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samrat Chaudhary likely to be next Bihar CM, Nitish Kumar to resign next week
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.